Saturday, May 31, 2014

உன் மந்திரப்புன்னகையால்..



உன் மந்திரப்புன்னகையில்
மயங்கிப்போன இக்குளகன்
குழம்பித்தவிக்கிறான்;
உன் கொழுநன்னாகிட போதும் - உன்
குடங்கையில் என் விரல்கள்
கோலமிட வேண்டும்.

பஞ்சிதங்களெல்லாம்
விரதமிருக்கிறது
பதுமை உன் பார்வை பட்டிட;
உன் பதியாகும் இவன்
ஆசையை ஏற்று
பரிசமிட அழைப்பாயோ - இல்லை
பார்வையாலே என்னைக்கட்டி
பைத்தியமாக்கி ரசிப்பாயோ!
 

Wednesday, May 28, 2014

சிறு நினைவூட்டல்

கவியெழுதி நாளாச்சி -என்
கற்பனையில் வரவில்லையேநீ ஏன்

காளமேகக்கூட்டத்தினூடே கலந்துவிட்டாயோயடி -என்
கருப்பழகி
கலந்திருப்பின் பொழிந்திடென் கற்பனைக்குளத்தில்
என் மனக்கானகம் காய்ந்துதிரத்தொடங்குமுன்
காட்சிதருவாய் சாரூபமாய் நீ.

என் மழைமேகம்

என் தவவலிமை அத்தனையும் ஒன்றாக்கி நானிட்ட பயிறுக்காய் மழைவேண்டி பிரார்த்தித்தேன் வேகமாய் ஓடிக்கொண்டிருக்கும் மேகங்களுக்கு என் பிரார்த்தனைய...