உன் மந்திரப்புன்னகையில்
மயங்கிப்போன இக்குளகன்
குழம்பித்தவிக்கிறான்;
உன் கொழுநன்னாகிட போதும் - உன்
குடங்கையில் என் விரல்கள்
கோலமிட வேண்டும்.
பஞ்சிதங்களெல்லாம்
விரதமிருக்கிறது
பதுமை உன் பார்வை பட்டிட;
உன் பதியாகும் இவன்
ஆசையை ஏற்று
பரிசமிட அழைப்பாயோ - இல்லை
பார்வையாலே என்னைக்கட்டி
பைத்தியமாக்கி ரசிப்பாயோ!