நின் எழுவாயிலே
எனைப் பதித்தேன்
உன் பய(னி)நிலை அறிந்தே
உ(ன்)னைப்பற்றி பாடினேன்
நீ செயல்படும் ஒரு பொருளா-இல்லை
என் செயல்களுக்கெல்லாம் தனி பொருளா!!
நின் எழுவாயிலே
எனைப் பதித்தேன்
உன் பய(னி)நிலை அறிந்தே
உ(ன்)னைப்பற்றி பாடினேன்
நீ செயல்படும் ஒரு பொருளா-இல்லை
என் செயல்களுக்கெல்லாம் தனி பொருளா!!
நீ துளையிட்டு சென்ற இடம்
இன்றும் நெஞ்சில் வடுவாய்....
நீ தொலைந்துசென்றபின்
காற்று தினம் தாலாட்டு பாடி ராகமிசைக்கிறதடி எனக்கு!
ஏய் பொன்வண்டே!
எனையே சுற்றிவந்த நீ
என் காதலியா...
இல்லை
இந்த காற்றா!
மூங்கிலாய் நான்...!
காற்றின் மடியிலேயமர்ந்து -தினம்
அசைந்து ஆடிக்கொண்டிருகிறேன்!
என் தவவலிமை அத்தனையும் ஒன்றாக்கி நானிட்ட பயிறுக்காய் மழைவேண்டி பிரார்த்தித்தேன் வேகமாய் ஓடிக்கொண்டிருக்கும் மேகங்களுக்கு என் பிரார்த்தனைய...