Friday, August 29, 2014

கடல்-மேக காதல்

மேகத்தின் மீது காதல்...

காதலியின் நினைவிலே தினம்
அலைவீசிக்கொண்டிருக்கிறது கடல்நீர்.

சுற்றிவீசும் தென்றலையெல்லாம்
சூராவளியாக்கி
முற்றியகாமத்திற்கு முழுமருந்திட
கனவோடு வாழ்ந்தவள் கரம்நாடிச்சென்றது கடல்நீர்.

ஆகாயத்தில் இணைந்து -அவன்
அரவணைப்பிலே தவழ்ந்து
ஆடிப்பாடி திரிந்தது
ஆகாயமேகம்..

கரு சுமந்தது மேகம்..

கைவிட்டுசென்றது கடல்நீர்..

கடல்நீர்சென்ற சோகத்திலே
கால்போன போக்கிலே
கரைதாண்டி சென்ற (கரு)மேகம்
மின்னல் வெளிச்சத்தில் பெற்றெடுத்தது,
அழகிய மழைத்துளிகளை.

பின்
பெற்றெடுத்த மழைத்துளியை தொலைத்துவிட்டு, தொலைந்தும்போய்விட்டது அம்மேகம்..

தரையில் அனாதையாக திரியும் மழைத்துளி
ஆணென்றால் நதியிணைந்து கடல் கலப்பதும்;
பெண்னென்றல் ஆவியாகி மேகமாவதும்தான் இவர்களின் சுழற்சி வாழ்க்கை.

Thursday, August 7, 2014

ச ரி க ம ப த நி

சரி தானடி -உன்
கமகம மணப் பார்வை
பகரம் கண்டு
தன்னிலை மறந்த இவனுக்கு
நித்திரை என்பதேது!

சரிதான், ஆனாலும்

நித்திரையுண்டு - நம்
தனிமையில் ஆரோஹணம்நீ பாடி
பட்டுடல்மேனி உன்மேல் அவரோஹணம் நானிசைத்து
மஞ்சத்தின்மேல்
கட்டிக்கண் மூடி
ரிஷபக்காளையிவன்
சரீரம் சாந்தமானால்.

என் மழைமேகம்

என் தவவலிமை அத்தனையும் ஒன்றாக்கி நானிட்ட பயிறுக்காய் மழைவேண்டி பிரார்த்தித்தேன் வேகமாய் ஓடிக்கொண்டிருக்கும் மேகங்களுக்கு என் பிரார்த்தனைய...