Thursday, December 24, 2015
Wednesday, December 23, 2015
சூரியனுக்குள் ஓர்நாள்
ஒளியொன்று இருப்பது எத்தனை உண்மையோ
அங்கே உயிரொன்று இருப்பதும் அத்தனை உண்மை.
சூரியனின் செந்நிற பிழம்பினுள்ளே இன்று சென்றேன்
அதீதசிகப்பு அளவான மஞ்சள் அதனுள் கரும்புள்ளியாய் காட்சியிருந்தது
பிரவிபலன் கண்டுண்டது கண்கள்
கண்டுண்ட காட்சி
என்னில் உன்
நினைவுக்கொப்பானது
உவமை நீயாயிருக்க உனையே பெயராக்கிவைத்திருக்கவேண்டும்
தாமதம்...
என்றோ முந்திவிட்டான் விசுவாமித்திரன்.
மனிதக்காய்ச்சல் காலம்
ஒழுக்கமீறுதல் இயற்கைதான்
ஒழுக்கம் கற்றுக்கொடுத்ததாலேயே இயற்கையைவென்று கடவுளானான் மனிதன்
கடவுள்களின் காலம் காலாவதியாகி,
மீண்டும்
ஆதிகாலத்தின் ஒழுக்கமீறுத்தல் எனும் இயற்கையின் ஆட்சிகாலமாகிவிட்டது இக்காலம்
இக்காலம் இம்முறை இயற்கையல்ல!
காரணம்,
மதியுச்சத்திலிருந்து மண்வீழ்ந்துமடிய என்றும் நினைத்திடாது இயற்கை;
மாறாக மனிதனே
தானே வீழ்ந்து இயற்கையையும் சேர்த்தழித்துக்கொண்டிருக்கிறான்.
மனிதக் காய்ச்சல் காலமிது.
Thursday, February 19, 2015
இலக்கண காதல்
நின் எழுவாயிலே
எனைப் பதித்தேன்
உன் பய(னி)நிலை அறிந்தே
உ(ன்)னைப்பற்றி பாடினேன்
நீ செயல்படும் ஒரு பொருளா-இல்லை
என் செயல்களுக்கெல்லாம் தனி பொருளா!!
Monday, February 9, 2015
மூங்கில் காதல்
நீ துளையிட்டு சென்ற இடம்
இன்றும் நெஞ்சில் வடுவாய்....
நீ தொலைந்துசென்றபின்
காற்று தினம் தாலாட்டு பாடி ராகமிசைக்கிறதடி எனக்கு!
ஏய் பொன்வண்டே!
எனையே சுற்றிவந்த நீ
என் காதலியா...
இல்லை
இந்த காற்றா!
மூங்கிலாய் நான்...!
காற்றின் மடியிலேயமர்ந்து -தினம்
அசைந்து ஆடிக்கொண்டிருகிறேன்!
என் மழைமேகம்
என் தவவலிமை அத்தனையும் ஒன்றாக்கி நானிட்ட பயிறுக்காய் மழைவேண்டி பிரார்த்தித்தேன் வேகமாய் ஓடிக்கொண்டிருக்கும் மேகங்களுக்கு என் பிரார்த்தனைய...
-
நீ பூப்பெய்து கரு சுமக்கும் முன்பே உன் காலடியில் கால்ஊன்றி நிமிர்ந்து வந்துவிடுகிறது உன் வாரிசு இந்த வாழைக்கன்று.
-
என் தவவலிமை அத்தனையும் ஒன்றாக்கி நனிட்ட பயிறுக்காய் மழைவேண்டி பிரார்த்தித்தேன் வேகமாய் ஓடிக்கொண்டிருக்கும் மேகங்களுக்கு என் பிரார்த்தனையை க...
-
பெண்மை அழகென்றால் அந்த பெண்மைக்கு அழகுதான் அந்த மூக்குத்தி மூக்குத்திகளின் மீதான எனது காதல் எங்கிருந்து வந்தது ...