Thursday, July 17, 2014

மலை-மேக காதல்

(எத்தனை அழகு இந்த
அதிகாலை மேகங்களுக்கு!!
இத்தனை அழகுடன் எங்குதான் சென்றுகொண்டிருக்கின்றன
இந்த மேகங்கள்!)

கம்பீரமாய் உயர்ந்து,
பசுமையிலே புதைந்து,
தென்றலும் மணமும் சேர்த்தெழுப்பும்
அழகிய மலைமகன் அவன்.

அவனை,
தூரமிருந்து ரசிப்பதும்
அவன் நினைவினிலே தினம் மிதப்பதும்
அவனையே சுற்றிவருவதுமாயிருக்கும்
வெண்மேகமகள் அவள்.

வாய்ப்பு கிடைக்கும் பொழுதெல்லாம் தன்காதலை உணர்த்திக்கொண்டேயிருந்தாள்
இம்மேகமகள்.

காதல் சொன்னாலும்
எற்றுக்கொள்ள ஏனோ மறுத்துவிட்டான்
அம்மலைமகன்.

நாட்கள் சென்றன..

உயிர்களின் உயிர் காத்த மலைமகன் உயிரை
உண்ணவந்தது இலையுதிர்காலம்.,
அதில்,
ஊமையாய் சிக்கி உயிர்விட ஆரம்பித்துவிட்டான் மலைமகன்.

தென்றல் வெப்பமனது,
மணம் மறைந்துபோனது,
நிழலில்வாழ்ந்த உயிர்களும்
இடம்மாறி சென்றிட,
அத்தனையும் இழந்து அனாதையாக ஆரம்பித்துவிட்டான் மலைமகன்.

பின்
தன்னுடல் வெப்பம் அதிகமாகி
மடிந்துபோகும் வழியிலே
மயங்கியும்விட்டான்.

மடிந்துபோக விட்டுவிடுமோ
காதல் நெஞ்சம்!

உரிமை எடுத்தது,

தன்னையே பிரித்து,
கண்ணீரில் குழைத்து,
மஞ்சுவாய் மலைமகன்மேல்படர்ந்து
உயிர்காத்து வந்தாள்,

உயிர்காத்து உயிர்காத்து
உருகியும் கொண்டிருந்தாள்,
மேகமகள்.

முடிவுக்கு வந்தது கோடைகாலம்..

முதல் மழைத்துளி மேகமகளையும்,
அடுத்த மழைத்துளி மலைமகனையும் தட்டியெழுப்ப,

தானேநாணி சென்றுவிட்டாள் மேகமகள்
தளிர்விட ஆரம்பித்துவிட்டான் மலைமகன்.

ராமுழுதுமான அவன் நினைவுடன்
இன்று
அதிகாலையிலே அழகாய்
ஒப்பனை செய்து
ஆனந்தமாய் காதல்சொல்ல சென்றுகொண்டிருக்கிறாள்
இம்மேகமகள்.

இம்முறை அதிக நம்பிக்கையுடன்.

Wednesday, July 2, 2014

இயற்கை

நீ
வாழுமிடமெல்லாம்
வனச்சோலை தெரியுதடி

உன்னைக்கான
இரு கண்கள் -தினம்
கட்டளை இடுகிறதடி

நீ
பூதுக்குலுங்கையிலே -மனம்
புத்துயுர் அடையுதடி

உன்
வாசம் பரவியதிலே -தென்றல்
தினம் தெருவில் ஆடுதடி

உனைத் தொட்டணைத்திட
மேகம்
கீழே இறங்குதடி

உன்
பாதம் நனைத்திட
அது நீரை பொழியுதடி

பட்டாம்பூச்சிகள் பல
உன் அழகில் பறக்குதடி

சில
பச்சோந்திகளும்
அதில் இணைய நினைக்குதடி

நீர் ஓடி வருகையிலே
மழை
நின்று பொழியுதடி

நீ துள்ளிகுதிக்கையிலே
மீன்கள்
ஆடி பாடுதடி

கருமேகம்
வெடித்திடவே
மின்னல் பிறக்குதடி

விண்மீன்கள்
மின்னிடவே
வெண்ணிலவு சிரிக்குதடி

நீலப்பெருங்கடலின்
எல்கை தெரியுதடி

அதை
காண நினைக்கையிலே
அது நீண்டே போகுதடி.

Tuesday, July 1, 2014

பாடல் வரிகளில் ஒன்று

என் நெஞ்சு தினம் வலிக்குது
உன் நெனப்பால தினம் கொதிக்குது

என் கண்ணு தூங்க மறுக்குது
என் கை பாட்டில் தேடுது

உனக்காக தினம் செலவழிச்சேன்
என் சொத்தெல்லாம் அடகுவச்சேன்

அது காத்துல போனது
இந்த காத்தாடி இப்போம் ஆடுது..

சாராய போத ஏறுது
சங்கதி உன்ன பாடுது
தள்ளாடி நானும் நடக்கையில
தாவணி உன்ன தேடுது

மூனாறு மல மேலே நீயும்
முன்னூறு அடிக்கு கீழ நானும்
உக்காந்து நானும் இருந்தாலும்
உம்முகம் தானா தெரியுது

பேனாவ நானும் எடுக்கையில
கையெழுத்து உம்பேராகுது
பெத்து எடுத்த தாயவிட
பாசம் உம்மேல கூடுது

முருகா jesus அல்லா
அவள முழுசா தந்திடு நல்லா

என் மழைமேகம்

என் தவவலிமை அத்தனையும் ஒன்றாக்கி நானிட்ட பயிறுக்காய் மழைவேண்டி பிரார்த்தித்தேன் வேகமாய் ஓடிக்கொண்டிருக்கும் மேகங்களுக்கு என் பிரார்த்தனைய...