Tuesday, July 1, 2014

பாடல் வரிகளில் ஒன்று

என் நெஞ்சு தினம் வலிக்குது
உன் நெனப்பால தினம் கொதிக்குது

என் கண்ணு தூங்க மறுக்குது
என் கை பாட்டில் தேடுது

உனக்காக தினம் செலவழிச்சேன்
என் சொத்தெல்லாம் அடகுவச்சேன்

அது காத்துல போனது
இந்த காத்தாடி இப்போம் ஆடுது..

சாராய போத ஏறுது
சங்கதி உன்ன பாடுது
தள்ளாடி நானும் நடக்கையில
தாவணி உன்ன தேடுது

மூனாறு மல மேலே நீயும்
முன்னூறு அடிக்கு கீழ நானும்
உக்காந்து நானும் இருந்தாலும்
உம்முகம் தானா தெரியுது

பேனாவ நானும் எடுக்கையில
கையெழுத்து உம்பேராகுது
பெத்து எடுத்த தாயவிட
பாசம் உம்மேல கூடுது

முருகா jesus அல்லா
அவள முழுசா தந்திடு நல்லா

No comments:

Post a Comment

என் மழைமேகம்

என் தவவலிமை அத்தனையும் ஒன்றாக்கி நானிட்ட பயிறுக்காய் மழைவேண்டி பிரார்த்தித்தேன் வேகமாய் ஓடிக்கொண்டிருக்கும் மேகங்களுக்கு என் பிரார்த்தனைய...