இன்று ஓர் புகழ்பெற்ற இயக்குனரின் அலுவலகத்திற்கு வாய்ப்பு தேடி செல்ல,
அங்கே என் சுயவிபரம் (bio-data) அடங்கிய காகிதம் கேட்கப்பட்டது. அதில் ஓர் கவிதையும் சொல்ல வேண்டுமென சொல்லி எழுதப்பட்டதுதான் இந்த வரிகள்.
"இந்த தாள்கள் எனக்கு
வாய்ப்பளிக்க பயன்படாவிட்டாலும் பரவாயில்லை;
அலுவலக நொருக்குத்தீனிகளுக்கு
அடியில் வைத்து பரிமாற பயன்படட்டும்".
மூலையில் போட்டுவிடாதீர்கள் முனுமுனுத்துக்கொண்டே இருக்கும்,
முடிந்தால்
முழுதாய் உபயோகித்துவிட்டு குப்பையில் வீசிவிடுங்கள்.
புன்னகையுடன் விடைபெற்றுவிடும்.
இப்படிக்கு
நானும் என் சுயவிபரம் அடங்கிய தாளும்.