Wednesday, February 26, 2014

நானும் என் சுயவிபரம் அடங்கிய தாளும்

இன்று ஓர் புகழ்பெற்ற இயக்குனரின் அலுவலகத்திற்கு வாய்ப்பு தேடி செல்ல,
அங்கே என் சுயவிபரம் (bio-data) அடங்கிய காகிதம் கேட்கப்பட்டது. அதில் ஓர் கவிதையும் சொல்ல வேண்டுமென சொல்லி எழுதப்பட்டதுதான் இந்த வரிகள்.

"இந்த தாள்கள் எனக்கு
வாய்ப்பளிக்க பயன்படாவிட்டாலும் பரவாயில்லை;
அலுவலக நொருக்குத்தீனிகளுக்கு
அடியில் வைத்து பரிமாற பயன்படட்டும்".

மூலையில் போட்டுவிடாதீர்கள்  முனுமுனுத்துக்கொண்டே இருக்கும்,
முடிந்தால்
முழுதாய் உபயோகித்துவிட்டு குப்பையில்  வீசிவிடுங்கள்.
புன்னகையுடன் விடைபெற்றுவிடும்.

இப்படிக்கு
நானும் என் சுயவிபரம் அடங்கிய தாளும்.

Tuesday, February 25, 2014

துரோகிகளுக்கு..

என் திறமை என்னவென்று தெரிந்தால்
நீ
நான் தோற்கவேண்டுமென ஆசைப்படுவாய் !

என் குணம்  என்னவென்று  தெரிந்தால்
நீ
நான் தோற்கவேண்டுமென ஆசைப்படுவாய்!!

என் ஜாதி என்னவென்று தெரிந்தால்
நீ
நிச்சயம் நான் தோற்கவேண்டுமென ஆசைப்படுவாய்.!!!

பொதுமை பேசும் பசுத்தோல் போர்த்திய எருமைகளே !
கொஞ்சம் கவனியுங்கள்
உங்கள் மனதை.,

பொறாமையெனும் விஷச்செடி பூத்துக்குலுங்கி நாற்றம் கண்களிலிருந்து வெளிவர துவங்கிவிட்டது.

செடியை வேருடன் நீக்குவது உன் விருப்பம் ,
ஆனால்,
பூக்களையாவது அறுவடை செய்துவிடு.,
காரணம்,
நாற்றம் உன் உண்மை உருவத்தை உலகிற்குகாட்டி தொடர்ந்து நடிக்கவிடாமல் செய்துவிடும்.

Monday, February 17, 2014

நிலாப்பெண்

மாலை பின்பொழுதில்
எங்கு சென்றுவிடுகிறான் இவன்

இன்னும் எத்தனை இரவுகள்
தனியாய் காத்திருப்பது.,

என,
தினம்  நினைத்து
உருகி தேய்ந்துகொண்டிருக்கிறது,
நிலாப்பெண்.

ஆதவனை நினைத்து.

Thursday, February 13, 2014

பெண் சிசுக்கொலை

உங்கள் ஊடலில்
உண்மை இல்லை - அதன்
கூடலில் காதல் இல்லை
காமமெனும் மாயயை வைத்து
கட்டிலில் நீ இருந்த நேரம்
வியர்வை
மூச்சி
அத்தனையும் பொய்யடா!.

உண்மையாக இருந்திருந்தால்
கொன்றிருக்கமாட்டாய்!,
பிறந்தது
பெண் குழந்தை எனும் போது.

Saturday, February 8, 2014

பனிமூட்டம்


நிலம்தொட நினைக்கும்
மேகங்கள்
கட்டிய
பாலம்தானோ - இந்த
பனிமூட்டம்.

Saturday, February 1, 2014

முதுமையின் ஏக்கம்

இன்னும் எத்தனை நாள்
அனாதையாக வாழவேண்டிய
இந்த நிலை

ஆண்டுக்கு ஒன்றாய்
அறுபதுமாத தவத்தில் பெற்ற
பஞ்சமாபுதல்வர்கள்,
ஆளுக்கொரு திசையில்
பஞ்சம் பிளைக்க சென்றுவிட,

ஆதரவின்றி நாங்கள்
பிரிந்து வாழும் இந்த நிலை
இன்னும் எத்தனை நாள்.

பேத்தி பிறந்த செய்தி
கடிதத்தில்

அவள் பெரியவளான
செய்தி தொலைபேசியில்

அவள் திருமணம்
நிச்சயித்ததை மட்டும்
நேரடியாக கண்டோம்
பக்கத்து வீட்டு நண்பரின்
கணிணியில்.

இப்படியே
காலங்கள் மாற்றம்
கண்டன.
நாங்கள் காணவில்லை.

அதனால்தான்
வாழ்ந்துகொண்டிருக்கிறோம்
அவர்களின் நினைவுகளை இன்றும்
நெஞ்சில் சுமந்துகொண்டு.

அவன் மாதம் பணம் அனுப்ப
தவறவில்லை;

பாசம் விசாரிக்க தவரவில்லை;
ஆனால்
ஏனோ மனம்வரவில்லை
எங்களுடன சேர்ந்தோ அல்ல
சேர்த்தோ வாழ.,

இந்த முதுமைகால
நிலையில் அவனுடன்
சேர்ந்து வாழ மட்டுமே ஆசை,

பாசம் அதற்கு பாரமில்லை
ஆனால்
அந்த நகர-நாகரீக
பண்பாட்டுக்குத்தான் எங்களை
பிடிக்கவில்லை,

பிடித்திருந்தால்,
இன்றும்
பிடித்திருக்கும்,

சிறுவயதில் என் முந்தானையில் வளர்ந்த என் மகனுக்கு
இன்றைய என் முதுமை.

இதயத்தின் கையெழுத்து

"உடல்மேல்
உயிர்வந்து ஒன்றுதல் இயல்பே"

இலக்கணத்தின் அர்த்தம்
கண்டேன் அந்த திருமண
பதிவு புத்தகத்தில்,

அவள்
என்னவளாகிய பின்,
என் கடைமெய்யெழுத்தும்,
அவள் முதல்மோனையும்
சேர்த்து
அவள் எழுதிய முதல்
கையெழுத்தில்...

ஆட்டோகிராப்பாக என் இதயத்திலும்..

முத்தம்

அன்பு மகிழ்ச்சியின்
வெளிப்பாடாய்
உயிர்களிடத்தில் இருக்கும் - ஓர்
உன்னத பகிர்மானம்
முத்தம்.

தற்பெருமை

தற்பெருமை பேசிக்கொண்டிருக்கும் நேரங்களைத்தான்
எதிரிகள்
முன்னேருவதர்க்கான வாய்ப்பாக
கொடுத்துவிடுகிறோம்.

என் மழைமேகம்

என் தவவலிமை அத்தனையும் ஒன்றாக்கி நானிட்ட பயிறுக்காய் மழைவேண்டி பிரார்த்தித்தேன் வேகமாய் ஓடிக்கொண்டிருக்கும் மேகங்களுக்கு என் பிரார்த்தனைய...