என் திறமை என்னவென்று தெரிந்தால்
நீ
நான் தோற்கவேண்டுமென ஆசைப்படுவாய் !
என் குணம் என்னவென்று தெரிந்தால்
நீ
நான் தோற்கவேண்டுமென ஆசைப்படுவாய்!!
என் ஜாதி என்னவென்று தெரிந்தால்
நீ
நிச்சயம் நான் தோற்கவேண்டுமென ஆசைப்படுவாய்.!!!
பொதுமை பேசும் பசுத்தோல் போர்த்திய எருமைகளே !
கொஞ்சம் கவனியுங்கள்
உங்கள் மனதை.,
பொறாமையெனும் விஷச்செடி பூத்துக்குலுங்கி நாற்றம் கண்களிலிருந்து வெளிவர துவங்கிவிட்டது.
செடியை வேருடன் நீக்குவது உன் விருப்பம் ,
ஆனால்,
பூக்களையாவது அறுவடை செய்துவிடு.,
காரணம்,
நாற்றம் உன் உண்மை உருவத்தை உலகிற்குகாட்டி தொடர்ந்து நடிக்கவிடாமல் செய்துவிடும்.
No comments:
Post a Comment