Tuesday, February 25, 2014

துரோகிகளுக்கு..

என் திறமை என்னவென்று தெரிந்தால்
நீ
நான் தோற்கவேண்டுமென ஆசைப்படுவாய் !

என் குணம்  என்னவென்று  தெரிந்தால்
நீ
நான் தோற்கவேண்டுமென ஆசைப்படுவாய்!!

என் ஜாதி என்னவென்று தெரிந்தால்
நீ
நிச்சயம் நான் தோற்கவேண்டுமென ஆசைப்படுவாய்.!!!

பொதுமை பேசும் பசுத்தோல் போர்த்திய எருமைகளே !
கொஞ்சம் கவனியுங்கள்
உங்கள் மனதை.,

பொறாமையெனும் விஷச்செடி பூத்துக்குலுங்கி நாற்றம் கண்களிலிருந்து வெளிவர துவங்கிவிட்டது.

செடியை வேருடன் நீக்குவது உன் விருப்பம் ,
ஆனால்,
பூக்களையாவது அறுவடை செய்துவிடு.,
காரணம்,
நாற்றம் உன் உண்மை உருவத்தை உலகிற்குகாட்டி தொடர்ந்து நடிக்கவிடாமல் செய்துவிடும்.

No comments:

Post a Comment

என் மழைமேகம்

என் தவவலிமை அத்தனையும் ஒன்றாக்கி நானிட்ட பயிறுக்காய் மழைவேண்டி பிரார்த்தித்தேன் வேகமாய் ஓடிக்கொண்டிருக்கும் மேகங்களுக்கு என் பிரார்த்தனைய...