Saturday, February 1, 2014

முதுமையின் ஏக்கம்

இன்னும் எத்தனை நாள்
அனாதையாக வாழவேண்டிய
இந்த நிலை

ஆண்டுக்கு ஒன்றாய்
அறுபதுமாத தவத்தில் பெற்ற
பஞ்சமாபுதல்வர்கள்,
ஆளுக்கொரு திசையில்
பஞ்சம் பிளைக்க சென்றுவிட,

ஆதரவின்றி நாங்கள்
பிரிந்து வாழும் இந்த நிலை
இன்னும் எத்தனை நாள்.

பேத்தி பிறந்த செய்தி
கடிதத்தில்

அவள் பெரியவளான
செய்தி தொலைபேசியில்

அவள் திருமணம்
நிச்சயித்ததை மட்டும்
நேரடியாக கண்டோம்
பக்கத்து வீட்டு நண்பரின்
கணிணியில்.

இப்படியே
காலங்கள் மாற்றம்
கண்டன.
நாங்கள் காணவில்லை.

அதனால்தான்
வாழ்ந்துகொண்டிருக்கிறோம்
அவர்களின் நினைவுகளை இன்றும்
நெஞ்சில் சுமந்துகொண்டு.

அவன் மாதம் பணம் அனுப்ப
தவறவில்லை;

பாசம் விசாரிக்க தவரவில்லை;
ஆனால்
ஏனோ மனம்வரவில்லை
எங்களுடன சேர்ந்தோ அல்ல
சேர்த்தோ வாழ.,

இந்த முதுமைகால
நிலையில் அவனுடன்
சேர்ந்து வாழ மட்டுமே ஆசை,

பாசம் அதற்கு பாரமில்லை
ஆனால்
அந்த நகர-நாகரீக
பண்பாட்டுக்குத்தான் எங்களை
பிடிக்கவில்லை,

பிடித்திருந்தால்,
இன்றும்
பிடித்திருக்கும்,

சிறுவயதில் என் முந்தானையில் வளர்ந்த என் மகனுக்கு
இன்றைய என் முதுமை.

No comments:

Post a Comment

என் மழைமேகம்

என் தவவலிமை அத்தனையும் ஒன்றாக்கி நானிட்ட பயிறுக்காய் மழைவேண்டி பிரார்த்தித்தேன் வேகமாய் ஓடிக்கொண்டிருக்கும் மேகங்களுக்கு என் பிரார்த்தனைய...