Wednesday, February 26, 2014

நானும் என் சுயவிபரம் அடங்கிய தாளும்

இன்று ஓர் புகழ்பெற்ற இயக்குனரின் அலுவலகத்திற்கு வாய்ப்பு தேடி செல்ல,
அங்கே என் சுயவிபரம் (bio-data) அடங்கிய காகிதம் கேட்கப்பட்டது. அதில் ஓர் கவிதையும் சொல்ல வேண்டுமென சொல்லி எழுதப்பட்டதுதான் இந்த வரிகள்.

"இந்த தாள்கள் எனக்கு
வாய்ப்பளிக்க பயன்படாவிட்டாலும் பரவாயில்லை;
அலுவலக நொருக்குத்தீனிகளுக்கு
அடியில் வைத்து பரிமாற பயன்படட்டும்".

மூலையில் போட்டுவிடாதீர்கள்  முனுமுனுத்துக்கொண்டே இருக்கும்,
முடிந்தால்
முழுதாய் உபயோகித்துவிட்டு குப்பையில்  வீசிவிடுங்கள்.
புன்னகையுடன் விடைபெற்றுவிடும்.

இப்படிக்கு
நானும் என் சுயவிபரம் அடங்கிய தாளும்.

No comments:

Post a Comment

என் மழைமேகம்

என் தவவலிமை அத்தனையும் ஒன்றாக்கி நானிட்ட பயிறுக்காய் மழைவேண்டி பிரார்த்தித்தேன் வேகமாய் ஓடிக்கொண்டிருக்கும் மேகங்களுக்கு என் பிரார்த்தனைய...