Friday, January 31, 2014

இரவு

உழைத்துக்களைத்தவன்
ஓய்வு பெற
ஆதவன் கொடுத்த - ஓர்
அற்புத நிழல்
இரவு

Thursday, January 30, 2014

காதல் என்பது...

காதல் புனிதமானது
காதல் தெய்வீகமானது
காதல் இந்த
உலகை வழிநடத்தும்
கருவியானது.,

உண்மைதான்...

அந்த
காதல் என்பது,
உண்மையான
அன்பாய் இருந்தால்,
அது உயிராய் இருந்தால்
உறுதியாய் இருந்தால்
அந்த காதல் வர அற்பகாரணம்
ஏதும் இல்லாமல் இருந்தால்
அதில்
முழுமையாய் விட்டுக்கொடுத்து இறுதிவரை பயணிக்கமுடிய என்றால்..,
காதல் உண்மைதான்.!

காதல்தான் அன்பு
அந்த அன்பே கடவுள்
அந்த கடவுள்தான்
பெற்றோர்கள்.

ஒன்றை அழித்துவிட்டு
மற்றொன்றில்
அன்பை செலுத்துவதை விட,
ஒன்றின் ஆசிவாதத்துடன்
மற்றொன்றில் செலுத்த அந்த
அன்பின் அளவு அதிகமாகும்.
அதனால் மகிழ்ச்சியும்
அதிகமாகும்.

ஆனால் என்றும்
மறந்துவிடவேண்டாம்,
காதல் பணத்தில் இருந்தாலோ,
அல்லது காமதின்மீது மட்டும்
இருந்தாலோ,
இல்லை இன்னபுற அழகில்
இருந்தாலோ -அது
நிலையானதல்ல என்பதை.

பெற்றவர்கள்
வசதியை காரணம்
சொல்லியோ,
இல்லை
ஜாதி மதத்தை காரணமாய்
சொன்னாலோ
துணிந்து போராடுங்கள்.,

இல்லை,
காதல்தான் நம் எதிர்காலம்
அந்த எதிர்காலம்தான்
வாழ்க்கை
அந்த வாழ்க்கையை அழகாய்
மகிழ்ச்சியாய் இறுதிவரை
கொண்டுசெல்வோம் என்ற
உறுதியுடன்
கடைசி வரை வாழ்ந்துகாட்டுங்கள்கள்.
உண்மை காதலுக்கு
ஓர்
உவமையாய்.

நம் சமுதாயம்

பணத்தை சில்லறையாக மாற்றி
பயணம் செய்கின்றனர் சிலர்..

சிறு சிறு உதவிகள் செய்து
உதவிக்கரம் நீட்டும்
சிறுவர்கள், முதியவர்கள்
எவருக்கும் போய்ச்சேர்வதில்லை
அந்த உதவியின் பலனாய்
அந்த நாணயங்கள்.

ஆனால்
ஒரு கை தட்டினாலே
எடுத்துவைத்துக்கொள்கிறார்கள்
பலர்,
சில்லறைகளை அல்ல,
நாணய தாள்களை.
சிறு பயத்துடன்...

தேவையில்லையென
தூக்கிவீசும் பலருக்கு
தெரியுமோ தெரியாதோ
இதையே தேவையென நினைத்து
வாழ்பவர்களின் நிலை

மதுபானக்கடையில் சிலர்
ஊழியர்களுக்கு கொடுக்கும்
காசு
போதையில் இருந்தாலும்
கொடுப்பதில்லை
வெளியே இருக்கும்
முதியவர்களுக்கு

வாழ்த்துக்களில்தான்
உண்மையான வரம் இருக்கிறது..

அந்த வாழ்த்துக்களை
பிறருக்கு வரமாய் கொடுத்து
கடவுளாய் இருப்பவன் எத்தனைபேர்
இல்லை
அதை சாபமாய் கொடுத்து
சாத்தானாக அலைபவன்
எத்தனைபேர்

சமுதாயம் உருவாவதல்ல..
உருவாக்கப்படுவது.
நாம்
எந்த மாதிரி சமுதாயத்தை
உருவாக்கிக்கொண்டிருக்கிறோம்.

Wednesday, January 29, 2014

மனம்

மனதை பத்தியமாய் கடைபிடித்திட,
மருந்துண்ணும் வேளையும் வருமோ வாழ்வில்.

Tuesday, January 28, 2014

வாழைக்கன்று




நீ பூப்பெய்து
கரு சுமக்கும் முன்பே

உன்
காலடியில்
கால்ஊன்றி
நிமிர்ந்து வந்துவிடுகிறது
உன் வாரிசு

இந்த வாழைக்கன்று.

Monday, January 27, 2014

சோம்பலின் விளைவு (சில கவிஞர்களுக்கு)

அழகான வார்த்தைகள்
அறியாமலே மாட்டியது சிந்தையில்

அதன் அழகினூடே பயணித்துக்கொண்டிருக்க
புன்னகையுடன் ரசித்துக்கொண்டிருந்தது
இமைகள் மூடிய விழி

இரண்டரை நிமிட பயணமது

பின் இறுதியில் -அதை
எழுதிட நினைக்க
என்னை மறக்கடித்துவிட்டு
என் மனதிடம் சொல்லிச்சென்றது

சோம்பலின் விளைவு என்னவென்று.

Sunday, January 26, 2014

என்னவள்

கட்டிலில் நீயோ பேதை- என்
கைவிரல் பிடித்திட பெதும்பை
அழகாய் எனைக்கட்டி
அணைப்பதில் நீயோ மங்கை
அணைந்துவிடமலே என்னுடன்
எரிவதில் நீயோ அரிவை
அன்பாய் மடியில் நானிருக்க -என்
தலைமுடி கோதும் நீ தெரிவை
தெரியாமலேயே எனை தீண்டிப்பார்க்க
நீதானடி என் பேரிளம்பெண்.

என் மழைமேகம்

என் தவவலிமை அத்தனையும் ஒன்றாக்கி நனிட்ட பயிறுக்காய் மழைவேண்டி பிரார்த்தித்தேன்

வேகமாய் ஓடிக்கொண்டிருக்கும் மேகங்களுக்கு என் பிரார்த்தனையை கேட்க நேரமில்லை

ஒருவேளை
அவை என்னைப்போன்ற வேறொருவரின் விருப்பத்திற்கிணங்க சென்றுகொண்டிருக்கலாம் என்று எண்ணி அவற்றை தடுத்து நிறுத்தாமல் என் தவத்தை கலைத்துவிட்டேன்

கண் திறந்து பார்க்க

வாடிய பயிர்களெல்லாம் என் முன் அரைமயக்கநிலையில் புன்னகைத்தன

அடம்பிடிக்கவில்லை

அமைதிகாத்தன என் பதிலுக்காய்

காத்திருக்கசொல்லி பனித்துளியிடம் கடன் கேட்க சென்றேன்

இது கோடைகாலம்
நான் வர அனுமதியில்லை
எனச்சொல்லி வருத்தம் தெரிவித்தது பனித்துளி

பரவாயில்லை என பதில் சொல்லி

சூரியனிடம் சில நாள் அதிக வெப்பம் கொடுத்துவிடாதே என்றும்
காற்றிடம் நான் வரும்வரை மென்காற்று கொடுத்து பயிரை பார்த்துக்கொள்
எனசொல்லி நீர்வேண்டி பயணம் செல்ல நினைத்தேன்.
ஆனால் இந்நிலையில் என் பயிர்களை தனியாய் விட்டுசென்றிட மனமில்லை

என் செய்வேன் நான்

வியர்வை துளிகளும் இல்லா என் உடலில் திரவமாய் மிச்சமிருப்பது
என் உதிரம் மட்டும்தான்

இல்லாமையின் உச்சத்தில் எனைத்தள்ளிவிட்ட காலத்தை எண்ணி பயிர்களுக்கு நடுவே அமர்ந்திருக்க

மழை வந்த மகிழ்ச்சியில் பயிர்கள் போட்ட சத்தம் என்னை விண்நோக்கி பார்க்கவைத்தது

சூரியன் புன்னகைத்தான்

பதிலுக்கு புன்னகைத்துவிட்டு பயிர்களை பார்க்க
மீண்டும் சப்தமிட்டன அரைமயக்க நிலையிலும் அதிக ஒலியுடன்

அப்போதுதான் உணர்ந்தேன்
என் கண்ணில் இன்னும் சில துளி நீர் இருந்திருக்கிறது என்று

இறுதியாய் ஓர் முடிவெடுத்து
உதிரம் பாய்ச்சிட நினைத்து
சதைகளிடம் அனுமதி கேட்டேன் அதை கீறிட

என் சதைகள்தானே
நான் எண்ணியவறே சரி என்றது

கூர்ஆயுதம் கையில் ஏந்தி
குருதிநீர் பாய்ச்சிட நினைத்தேன்
சூரியன் வேண்டாமென்றது
சுடுமணலுக்கு தேவையே என்று
இடக்கை சதையை கிழித்தேன்
உதிரத்தில் வேகமில்லை
கூடுதலாய் கொஞ்சம் கிழித்தேன்
என்ன இதுவென்றது பயிர்
விருந்து நீர் என்றேன்
துள்ளிப்பாடியது பயிர்
சில நிமிடங்களில் தூங்கிவிடுவேன்
எனச்சொல்லி மயங்கிவிழுந்தவன்தான் நான்

சில மனித்துளிகளில் என் கனவில் பெருமழை

வெள்ளநீர் என் மூச்சிக்குழலேற சென்றிட
கண்விழித்துவிட்டேன்

ஆம்
கண்டது கனவல்ல

ஏதோ ஓர் வெள்ளைப்போர்வை என்மேல் போர்த்தியிருந்தது

என்னவென்று தொட்டுப்பார்க்க
என் கைபிடித்து காயத்திற்கு மருந்திட்டு வாழ்த்திச்சென்றது
எனக்காகவே வந்திருந்த மழை மேகம்.

Saturday, January 25, 2014

நினைவுகள்

ஐந்தரை வயது உனக்கு - அப்போது
என் முதல் தோழியாய் நீ

எதிரெதிர் வீடுகளில் வசித்திட - தினம்
உன் பெயர் சொல்லியே அழைத்திடுவேன் விளையாட

இன்றும் ஞாபமிருகிறது
அந்த கட்டிமுடிக்கப்படாத வீடு..

அங்கே குவிக்கப்பட்டிருந்த மணற்குவியல்களும், அதில்  செடிகளும் பூக்களுமாய்
சிறு நந்தவனம் போல் காட்சியளித்துக்கொண்டிருக்கும்.

பூக்கள் கொஞ்சம் பறித்து
கடுகுச்செடியென்று ஒன்றுண்டு
அதன் காய்கள் சேர்த்து
வாடாமல்லி அதன் இலை
நெருஞ்சிமுள் பூ என
அத்தனையும் கொண்டு
சிறு கடை வைத்திருப்பேன்
நீ காய்கறி வாங்குவதாய் வருவாய்

அரிசி நீ கேட்பாய்- மணல்
அள்ளி நான் கொடுப்பேன்

இருப்பதையெல்லாம் என்னவென்று கேட்டு எல்லாமும் வாங்கிச்செல்வாய்
பின் என்னிடமே கொடுப்பாய்

மணற்குவியலின் ஒருபுறம்  நீ மறுபுறம் நான்
ஆளுக்கொருபுறமாய் தோண்டி
சிறு சுரங்கம் அமைத்திடுவோம் பின் அடுத்த எதிர்பக்கட்திலிருந்து
கைகள் குலுக்கிடுவோம்...

இன்னும் எத்தனை ஞாபகங்கள் தோன்றுகிறது..
அந்த கட்டிமுடிக்கப்படாத வீட்டை
இன்று கண்மூடி காண்கையில்..

நினைவுகள் தொடரும்....

என் மழைமேகம்

என் தவவலிமை அத்தனையும் ஒன்றாக்கி நானிட்ட பயிறுக்காய் மழைவேண்டி பிரார்த்தித்தேன் வேகமாய் ஓடிக்கொண்டிருக்கும் மேகங்களுக்கு என் பிரார்த்தனைய...