Saturday, January 25, 2014

நினைவுகள்

ஐந்தரை வயது உனக்கு - அப்போது
என் முதல் தோழியாய் நீ

எதிரெதிர் வீடுகளில் வசித்திட - தினம்
உன் பெயர் சொல்லியே அழைத்திடுவேன் விளையாட

இன்றும் ஞாபமிருகிறது
அந்த கட்டிமுடிக்கப்படாத வீடு..

அங்கே குவிக்கப்பட்டிருந்த மணற்குவியல்களும், அதில்  செடிகளும் பூக்களுமாய்
சிறு நந்தவனம் போல் காட்சியளித்துக்கொண்டிருக்கும்.

பூக்கள் கொஞ்சம் பறித்து
கடுகுச்செடியென்று ஒன்றுண்டு
அதன் காய்கள் சேர்த்து
வாடாமல்லி அதன் இலை
நெருஞ்சிமுள் பூ என
அத்தனையும் கொண்டு
சிறு கடை வைத்திருப்பேன்
நீ காய்கறி வாங்குவதாய் வருவாய்

அரிசி நீ கேட்பாய்- மணல்
அள்ளி நான் கொடுப்பேன்

இருப்பதையெல்லாம் என்னவென்று கேட்டு எல்லாமும் வாங்கிச்செல்வாய்
பின் என்னிடமே கொடுப்பாய்

மணற்குவியலின் ஒருபுறம்  நீ மறுபுறம் நான்
ஆளுக்கொருபுறமாய் தோண்டி
சிறு சுரங்கம் அமைத்திடுவோம் பின் அடுத்த எதிர்பக்கட்திலிருந்து
கைகள் குலுக்கிடுவோம்...

இன்னும் எத்தனை ஞாபகங்கள் தோன்றுகிறது..
அந்த கட்டிமுடிக்கப்படாத வீட்டை
இன்று கண்மூடி காண்கையில்..

நினைவுகள் தொடரும்....

No comments:

Post a Comment

என் மழைமேகம்

என் தவவலிமை அத்தனையும் ஒன்றாக்கி நானிட்ட பயிறுக்காய் மழைவேண்டி பிரார்த்தித்தேன் வேகமாய் ஓடிக்கொண்டிருக்கும் மேகங்களுக்கு என் பிரார்த்தனைய...