Thursday, January 30, 2014

நம் சமுதாயம்

பணத்தை சில்லறையாக மாற்றி
பயணம் செய்கின்றனர் சிலர்..

சிறு சிறு உதவிகள் செய்து
உதவிக்கரம் நீட்டும்
சிறுவர்கள், முதியவர்கள்
எவருக்கும் போய்ச்சேர்வதில்லை
அந்த உதவியின் பலனாய்
அந்த நாணயங்கள்.

ஆனால்
ஒரு கை தட்டினாலே
எடுத்துவைத்துக்கொள்கிறார்கள்
பலர்,
சில்லறைகளை அல்ல,
நாணய தாள்களை.
சிறு பயத்துடன்...

தேவையில்லையென
தூக்கிவீசும் பலருக்கு
தெரியுமோ தெரியாதோ
இதையே தேவையென நினைத்து
வாழ்பவர்களின் நிலை

மதுபானக்கடையில் சிலர்
ஊழியர்களுக்கு கொடுக்கும்
காசு
போதையில் இருந்தாலும்
கொடுப்பதில்லை
வெளியே இருக்கும்
முதியவர்களுக்கு

வாழ்த்துக்களில்தான்
உண்மையான வரம் இருக்கிறது..

அந்த வாழ்த்துக்களை
பிறருக்கு வரமாய் கொடுத்து
கடவுளாய் இருப்பவன் எத்தனைபேர்
இல்லை
அதை சாபமாய் கொடுத்து
சாத்தானாக அலைபவன்
எத்தனைபேர்

சமுதாயம் உருவாவதல்ல..
உருவாக்கப்படுவது.
நாம்
எந்த மாதிரி சமுதாயத்தை
உருவாக்கிக்கொண்டிருக்கிறோம்.

No comments:

Post a Comment

என் மழைமேகம்

என் தவவலிமை அத்தனையும் ஒன்றாக்கி நானிட்ட பயிறுக்காய் மழைவேண்டி பிரார்த்தித்தேன் வேகமாய் ஓடிக்கொண்டிருக்கும் மேகங்களுக்கு என் பிரார்த்தனைய...