அழகான வார்த்தைகள்
அறியாமலே மாட்டியது சிந்தையில்
அதன் அழகினூடே பயணித்துக்கொண்டிருக்க
புன்னகையுடன் ரசித்துக்கொண்டிருந்தது
இமைகள் மூடிய விழி
இரண்டரை நிமிட பயணமது
பின் இறுதியில் -அதை
எழுதிட நினைக்க
என்னை மறக்கடித்துவிட்டு
என் மனதிடம் சொல்லிச்சென்றது
சோம்பலின் விளைவு என்னவென்று.
No comments:
Post a Comment