Monday, January 27, 2014

சோம்பலின் விளைவு (சில கவிஞர்களுக்கு)

அழகான வார்த்தைகள்
அறியாமலே மாட்டியது சிந்தையில்

அதன் அழகினூடே பயணித்துக்கொண்டிருக்க
புன்னகையுடன் ரசித்துக்கொண்டிருந்தது
இமைகள் மூடிய விழி

இரண்டரை நிமிட பயணமது

பின் இறுதியில் -அதை
எழுதிட நினைக்க
என்னை மறக்கடித்துவிட்டு
என் மனதிடம் சொல்லிச்சென்றது

சோம்பலின் விளைவு என்னவென்று.

No comments:

Post a Comment

என் மழைமேகம்

என் தவவலிமை அத்தனையும் ஒன்றாக்கி நானிட்ட பயிறுக்காய் மழைவேண்டி பிரார்த்தித்தேன் வேகமாய் ஓடிக்கொண்டிருக்கும் மேகங்களுக்கு என் பிரார்த்தனைய...