ஒழுக்கமீறுதல் இயற்கைதான்
ஒழுக்கம் கற்றுக்கொடுத்ததாலேயே இயற்கையைவென்று கடவுளானான் மனிதன்
கடவுள்களின் காலம் காலாவதியாகி,
மீண்டும்
ஆதிகாலத்தின் ஒழுக்கமீறுத்தல் எனும் இயற்கையின் ஆட்சிகாலமாகிவிட்டது இக்காலம்
இக்காலம் இம்முறை இயற்கையல்ல!
காரணம்,
மதியுச்சத்திலிருந்து மண்வீழ்ந்துமடிய என்றும் நினைத்திடாது இயற்கை;
மாறாக மனிதனே
தானே வீழ்ந்து இயற்கையையும் சேர்த்தழித்துக்கொண்டிருக்கிறான்.
மனிதக் காய்ச்சல் காலமிது.
No comments:
Post a Comment