Saturday, February 27, 2016

காதல் (உயிர்) விதி

தீயென்பதெல்லாம் நீயாய்

தீண்டினால் வலிதெரியுமோ - இல்லை

முழுதாய் பற்றியெரியுமோ

அணைப்பது நீயென்றால்

அணைவதெப்படி; அணையாமல்

எரிவதுதானே உயிர் - காத

லுலகத்தின் அடிப்படை விதி


No comments:

Post a Comment

என் மழைமேகம்

என் தவவலிமை அத்தனையும் ஒன்றாக்கி நானிட்ட பயிறுக்காய் மழைவேண்டி பிரார்த்தித்தேன் வேகமாய் ஓடிக்கொண்டிருக்கும் மேகங்களுக்கு என் பிரார்த்தனைய...