Sunday, March 12, 2017

ஏய் மனமே...! கேள்

வீடு வந்துசேர்ந்திடு மனமே
அது உனக்கான இடமன்று
உடல் உணர்வின்றி தவிப்பது
உயிருக்கு வலிக்கிறது
கட்டியிழுத்து வந்திடலாம்
கடிவாளம் உனக்கேது.
கேள்,
நிகழ்கால போதைகள்
கடந்தகாலம் நினையாது;
கடந்தகாலம் நினைக்க
மறுக்கும் இக்கலியில்
நிகழ்கால போதைகளின்
பிரிதல்கள் ஆனந்தமதானே
தவிர்த்து வருந்திடத்தேவையில்லை.
கொண்டாடும் நேரமிது
இனி கொண்டாடு.

No comments:

Post a Comment

என் மழைமேகம்

என் தவவலிமை அத்தனையும் ஒன்றாக்கி நானிட்ட பயிறுக்காய் மழைவேண்டி பிரார்த்தித்தேன் வேகமாய் ஓடிக்கொண்டிருக்கும் மேகங்களுக்கு என் பிரார்த்தனைய...