Saturday, March 11, 2017

மீன்களின் மொழி ராகமானது _ விண் மீன்களில் நிலவு ராத்திரி தேடுது

தெள்ளத்தெளிகண்ணாலும் அதன்
சீறிய ஒளியாலும்
மெல்லத்தானிங்கு இருக்கிறேன் என்று
கண்ணிமையால் காட்சிபரப்புவாள்
இடப்புறம் வகிடெடுப்பாள்
வாய்மூடி கண்சிரிப்பாள்
வராத வார்த்தைகளையெல்லாம்
வரவேற்க எனையும்சேர்த்தழைப்பாள்
குங்குமம் கொஞ்சம்கோதி
நடுநெற்றியில் புள்ளிவைப்பாள்
புள்ளிகளின் நாட்களை ஒன்றாக்கி
புதுக்கோலம் வரைந்துவைப்பாள்
மூக்குத்தி நுனி மூக்கினோரம்
தென்றல் ஆடவைப்பாள்
கம்மல்களும் அழகுதானென்று
தென்றலையே சொல்லவைத்தாள்
இன்று,
மீன்களின் மொழி
ராகமானது _ விண்
மீன்களில் நிலவு
ராத்திரி தேடுது

No comments:

Post a Comment

என் மழைமேகம்

என் தவவலிமை அத்தனையும் ஒன்றாக்கி நானிட்ட பயிறுக்காய் மழைவேண்டி பிரார்த்தித்தேன் வேகமாய் ஓடிக்கொண்டிருக்கும் மேகங்களுக்கு என் பிரார்த்தனைய...